ஆகஸ்ட் 8, 2024
இன்று டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான செயல் வீரர் கூட்டம் விழுப்புரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு இயக்கத்தின் இணைந்த 20 மாவட்டங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட இயக்கத்தின் முன்னோடி நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இக்கூட்டத்தை எங்களது ஆசான் திருவாளர் TMN தீபக் அவர்கள் தலைமையிலும், எங்கள் இயக்கத்தின் மாநில அவைத்தலைவர் திருவாளர் வேலாயுதம் அவர்கள் முன்னவராக இருந்து கூட்டத்தை நடத்திக் கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியை எமது மாநிலத்தின் பொதுச்செயலாளர் திருவாளர் அண்ணாமலையும், விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட நிர்வாகிகளும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நமது இயக்கத்தை சார்ந்த அனைத்து மாநில நிர்வாகிகளும் வெவ்வேறான தலைப்புகளில் கீழ் உரை நிகழ்த்தியது உள்ளபடியே நமது இயக்கத்தை வழிநடத்த அடுத்த கட்ட தலைவர்கள் உருவாகி உள்ளனர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்று அவர்களுக்கு உண்டான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும் மிகச் சிறப்பான உணவு கொடுத்தும் உபசரித்த எமது மாநிலத்தின் பொதுச் செயலாளர் அண்ணாமலை அவர்களுக்கும் அவருடன் பயணிக்கும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றோம்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு தன்னார்வ தொண்டாளர்களாக நிலக்கோட்டை மாடர்ன் (நர்சிங்) சமுதாய கல்லூரி மாணவிகள் மிகச் சிறப்பாக தொண்டாற்றினர்.